காலை எழுத்தவுடன் பசுவிற்கு முன்னிரவு ஊற போட்டு வைத்திருந்த பருத்தி கொட்டை புண்ணாக்கு தவிடு போன்றவை கலந்த தண்ணீரை வைத்து அதன் பசி ஆற்றுவான்.
பின் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டு அது பசுவின் மடு மீது மோதி பசுவுக்கு பால் சுரந்தவுடன் கன்றையும் பசுவையும் ஏமாற்றி மதுவின் மீது தண்ணீர் தெளித்து பால் கரப்பான்.
தன் மாடுகளுக்கு வைக்கோல் போன்றவற்றை போட்டுவிட்டு. அந்த பாலை டிப்போக்களிலோ அல்லது நேரிடியாகவோ சென்று விற்பனை செய்கிறான். பிறகு மறுபடி வீட்டுக்கு வந்து வைக்கோலை தின்று முடித்து அசை போட்டு கொண்டிர்க்கும் பசுக்களுக்கு மீண்டும் வைக்கோல் போடுகிறான்.
பின் தன்னிடம் இருக்கும் சைக்கில் அல்லது பைக் அல்லது பொடி நடையாகவோ சென்று வயல்வெளிக்கு சென்று புல் அறுக்கிறான். புல் விளையாத தருணங்களில் எங்காவது சென்று புல் வாங்கி வருகிறான். வயல்வெளியில் அறுக்கப்படும் புல்லும் இலவசம் இல்லை அதற்கும் அந்த வயல்வெளி சொந்தகாரனுக்கு ஒரு கணிசமான தொகை தரவேண்டியுள்ளது.
பின் அறுத்த அல்லது வாங்கிய புல்லை தன் பசுக்களுக்கு கொண்டு வந்து போடுகிறான். புல் மற்றும் வைக்கோல் சரியாக விளையாத சமையங்களில் அதன் விலை மிக அதிகமாக ஏறிவிடும் வேறு அந்த சூழ்நிலையும் அவன் தன் தலையில் தான் சுமக்க வேண்டும். சரி புல் விலை தான் அதிகமாக இருக்கிறதே புல் போடாமல் விட்டு விடுவோம் என்று இருந்தால் மாட்டில் பாலின் அளவு குறைந்து விடும். ஒரு முறை குறைந்து விட்டால் மீண்டும் பாலின் அளவை ஏற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் சில வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். ஆதலால் புல் புண்ணாக்கு வைக்கோல் போன்றவை என்ன விலையாக இருந்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்.
இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியில் அழைத்து செல்ல வேண்டும். பின் அதனை நன்கு குளிப்பாட்ட வேண்டும் குறைந்தது வாரம் ஒரு முறையாவது. பின் அவைகள் தங்கி இருக்கும் கொட்டாய்களையும் அங்கு குவியல் குவியலகாக இருக்கும் சனத்தை அள்ளி சுத்த படுத்த வேண்டும். சில நேரங்களில் குறிப்பாக வெயில் காலங்களில் மாடுகள் கட்டியாக சாணம் போடாமல் கலிய தொடங்கிவிடும் அப்போது மாடுகளும் சரி கொட்டாயும் சரி மிக வேகமாக அழுக்காகி விடும் அதனால் இரண்டையும் அடிக்கடி சுத்த படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
இடையில் மதியம் மற்றும் இரவு நேரத்தில் மாட்டிற்கு பருத்தி கொட்டை புண்ணாக்குடன் தண்ணி காட்ட வேண்டும். நம் தெருக்களில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் குடங்களை வைக்க வேண்டும் அதில் அவர்கள் போடும் மீந்து போன கலினி தண்ணி கஞ்சி முதலியவற்றை சேர்த்து அவற்றையும் மாடுகளுக்காக கொடுக்க வேண்டும்.
இப்படி தான் ஒவ்வொரு நாளும் ஒரு பால்காரனின் வாழ்க்கை நகர்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக