செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தமிழரின் தாகம் - காவிரி 3



மேகதாது அணை திட்டம்:

சுருக்கமாக சொல்வதென்றால் இது தமிழக விவசாயிகளுக்கு ஓட்டு மொத்தமாக வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு சமமான திட்டம். பாலாற்றில் இருந்து வரும் ஒரு சிறு பகுதி தவிர மேட்டூர்அணை மொத்தமாக காவிரியை நம்பியே உள்ளது. இந்த மேகதாது திட்டம் என்பது இரண்டு 25 TMC அணைகள் அல்லது ஒரு 50 TMC அணை கட்டும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கபடும் தண்ணீரை பின் கோலார், பெங்களூரு மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள மற்ற கர்நாடக மாவட்டங்களுக்கு திருப்பிவிடுவது.

அணை என்பது ஒரு நிரந்தர கட்டுமானம், அது பல தலைமுறைகளுக்கு அங்கேயே நிலைத்து விட கூடிய ஒன்று. ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து வருடத்திற்கு ஒரு முறை தான் காவிரி பகுதியில் வெள்ளம் வருகிறது. மற்ற வருடங்களில் இந்த வருடம் (2015 - 2016) உட்பட அனைத்து வருடங்களும் பற்றாக்குறையே நிலவுகிறது. இந்த வருடம் போதுமான பருவ மழை பெய்தது என்று அறிவிக்கப்பட்டும் பற்றாக்குறை தான் நிலவுகிறது.

இந்த மேகதாது திட்டமானது சரியாக தமிழ்நாட்டு எல்லையில் மேற்கு கர்நாடகத்தில் அரக்காவதி, கபினி, காவிரி சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட திட்டமிட படுகிறது. இதனால் கபினி அனையிலிருந்தோ அல்லது கிருஷ்ணா ராஜ சாகர் அனையிலிருந்தோ தண்ணீர் திறந்து விட பட்டால் அது தமிழகத்தை அடைவதற்கு முன் இந்த அணையை நிறைத்து விட வேண்டும். ஆக இந்த அணை நிறையும் வரை ஆ என்று வாயை திறந்துகொண்டு தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.

தொன்றுதொட்டே மேட்டூர்அணையில் விவசாயத்திற்காக ஜூன் 12 ஆடி பட்டம் அன்று தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நாள் கூட சரியான தேதியில் தண்ணீர் திறந்துவிட முடிவதில்லை. என்ன தான் காவிரி நான்கு மாநிலங்களில் பாய்ந்தாலும் அது ஆற்று படுக்கையை (டெல்ட்டா) உருவாக்குவது தமிழ்நாட்டின் மேற்கே திருச்சியில் தான். காவிரி டெல்ட்டா ஒரு வளமான பகுதி எவ்வளவு வளம் என்றால் ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு மூன்று போகம் விளைந்து அமோக மகசூல் தரக்கூடிய வளம். ஆனால் இன்றோ ஒரு போகம் விளையுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கர்நாடக அரசு எப்படி இந்த மேகதாது திட்டத்தை ஞாய படுத்துகிறது என்றால். அவர்கள் தமிழகத்திற்கு 250 TMC தண்ணீர் திறந்துவிட்டார்களாம். ஆனால் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நீரின் அளவு 190 TMC தானாம். ஆக மீதமுள்ள 60 TMC தண்ணீர் அனாமத்தாக கடலில் கலந்து வீணாவதை தடுக்கவே இந்த அணையை கட்டுகிறார்களாம். ஆனால் அவர்கள் சொல்லும் இந்த 250 TMC எப்போது திறந்துவிட்டார்கள் என்றால் ஒரு முறை அதிக மழை பொலிந்து வெள்ளம் ஏற்பட்ட போது திறந்துவிட்டார்களாம். கர்நாடகா கடந்த 10-20 வருடங்கள் திறந்து விட்ட நீரின் அளவின் சராசரியை வைத்து சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. எப்போதோ வெள்ளத்தால் திறந்துவிட்டார்கலாம் அந்த அதிகபடியான அளவை கணக்கில் கொள்வார்களாம். உண்மையில் இது நகைப்புக்குரியதே.

ஆக கன்னட அரசு என்ன சொல்கிறது என்றால் அவர்கள் அதிகபடியான நீரை திறந்துவிட்டு அதில் 190 TMC நீரை தமிழகத்திற்கு கொடுத்துவிட்டு மீதத்தை மேகதாது அணையில் சேமித்து கொள்வார்கலாம். இதை அப்படியே நம்பி ஏற்றுகொள்வோம் ஆனால் தமிழர்களை விட கேனையர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. நாம் அவ்வளவு கேனைகள் இல்லை என்பதற்கு சான்றாய் தமிழக அரசும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது. காரணம் இந்த வருடம் நமக்கு தேவையான 190 TMC தண்ணீரை பெற நாம் எவ்வளவு போராட வேண்டியுள்ளது. இன்னுமும் (Sep 09 2016) அந்த அளவு தண்ணீர் நம்மை வந்து அடையவில்லை. ஆக 190 TMC நீரையே தர முடியாத உன்னால் எப்படி 250 TMC தண்ணீர் தர முடியும் என்பதே தமிழக அரசின் வாதம்.

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட படும் 190 TMC தண்ணீரில் ஒவ்வொரு சொட்டும் விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்த பட்டுவிட்டால் எந்த நீர் கடலை சென்றடையும்? ஒரு குறிப்பிட்ட அளவு நீராவது கடலை சென்று அடையவேண்டாமா. அப்படி ஒரு சொட்டு நீரை கூட கடலுக்கு தராமல் இருந்தால் அது சுற்றுப்புற சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுத்து விடாதா? ஆக இயற்க்கை சமநிலையை காக்க ஒரு குறிப்பிட்ட அளவு நீராவது கடலை சென்றடைவது அவசியமாகிறது.

ஆசியாவில் இரண்டாவது பெரிய மாங்க்ரூ காடுகள் தமிழகத்தில் பிச்சாவரத்தில் கொள்ளிட வாயில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. இந்த மாங்க்ரூ காடுகள் இல்லையென்றால் 2004 சுனாமியில் தமிழ்நாடு இன்னுமும் பெரிய இழப்புகளை சந்தித்திருக்கும். இந்த மாங்க்ரூ காடுகள் பொதுவாக நன்னீரும் உப்பு நீரும் கலக்கும் இடத்தில் வளரும் தன்மை கொண்டவை. நாம் நன்னீரை மொத்தமாக தடை செய்துவிட்டால் இந்த மாங்க்ரூ காடுகள் அழிந்து விடாதா?





சில அரசியல் நாடகங்கள்:

ஆகஸ்ட்டு 13 - 2016 கர்நாடக முதல்வர் சொல்கிறார் எங்களுக்கே தண்ணீர் இல்லாததால் இந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் திறந்துவிட படும் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று.

ஆதாரம்:

http://www.thehindu.com/news/national/karnataka/no-water-to-spare-karnataka-tells-tn/article8983134.ece

அடுத்து ஆகஸ்ட்டு 15 - 2106 அதே கர்நாடக முதல்வர் சித்தாராமையா சொல்கிறார் காவிரியில் திறந்துவிட படும் 250 TMC தண்ணீர் வீணாகாமல் இருக்க காவிரிக்கு குறுக்கே 5,912 கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று .

அதாரம்:

http://timesofindia.indiatimes.com/city/chennai/Ktaka-plans-new-dam-at-Mekedatu-Farmers-to-protest/articleshow/53715010.cms

இது எப்படி இருக்கிறது பருவமழை பற்றாக்குறையால் தமிழகத்திற்கு எந்த தண்ணீரும் தர இயலாது என்று சொல்லிவிட்டு அடுத்த இரண்டு நாளில் தமிழகத்திற்கு தரும் தண்ணீரில் 50 TMC கடலில் கலந்து வீனாகிறது ஆதால் அணை கட்டுகிறோம் என்பது.

என்னை பொறுத்த வரை நீங்கள் காவிரி கரையில் இருக்கிர்களோ இல்லையோ தமிழகத்தை சேர்ந்த ஒவ்வொரு வரும் இதை எதிர்க்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்ற பட்டுவிட்டால் அது தமிழக வரலாற்றின் மிக பெரிய பிழையாக மாரி நமக்கும் நம் சந்ததியினருக்கும் பேரழிவை தந்து விடும். பருவநிலை மாற்றத்தாலும் பருவமழை நிலையற்று இருப்பதாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்றால் ஒட்டுமொத்தமாக நாம் விவசாயத்தை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக