செவ்வாய், 30 டிசம்பர், 2014

பிகே


எனக்கு இந்தி தெரியாததால் அவ்வளவாக இந்தி படம் பார்ப்பது இல்லை. இந்த படத்தை நண்பர்கள் அனைவரும் ஆக ஓகோ என புகழ்ந்தாலும். ஏதோ ஒரு நல்ல கருத்தை அமீர்கான் சொல்ல முயன்றிறுப்பதாகவும் கேள்விபட்டே பார்க்க வந்தேன். கண்டிப்பாக ஏமாற்றம் இல்லை நல்ல படமே சொல்ல வந்த கருத்தையும் ஓரளவு எந்த பிசிறும் இல்லாமல் சொல்லி இருக்கிறார்.

நாம் மற்ற கிரகங்களை ஆராய்ச்சி பண்ணுவது போல் வேற்று கிரகங்களில் வாழும் நம்மை போன்ற மனித இனம் நம் புவியை ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சிக்காக அமீர்கான் புவிக்கு வருகிறார். வந்த உடனே தன் கழுத்தில் அணிந்திருக்கும் ரிமோட்டை பறிகொடுக்கிறார். இந்த முதல் காட்சியிலேயே புவி எவ்வளவு ஆபத்தான திருடர்கள் வாழும் இடம் என்பதை நமக்கும் அமீர்கானுக்கும் உணர்த்திவிடுகிறது. அதன் பிறகு அந்த ரிமோட்டை எப்படி கண்டுபிடித்து அவர் கிரகம் செல்கிறார் என்பதே மீதி கதை. அமீர்கானின் அப்பாவி தனமான பார்வையும் அதில் வரும் சோகமும் எப்படி பட்ட கல்நெஞ்ச காராக இருந்தாலும் கரைத்து அழவைத்துவிடும் அவ்வளவு சிறப்பான நடிப்பு.

ஒரு மனிதன் புவியில் பிறக்கும் போது எந்த மதத்தையும் சாராமல் மனிதனாக பிறக்கிறான் ஆனால் அவன் பெற்றோர்கள் மற்றும் அவனை சுற்றியுள்ள உலகம் அவனுக்கு மதச்சாயம் பூசிவிடுகிறது. ஆனால் அப்படி பெற்றோர்கள் சுற்றம் அற்று இருக்கும் ஒருவர் எந்த மதத்தை தழுவுவார்? அப்படி ஒரு குழப்ப நிலையில் எல்லா மதத்தையும் எல்லா கடவுளையும் வணங்கி தன்னுடைய ரிமோட்டை பெற முயற்ச்சிக்கிறார் அமீர்கான். இதில் அனைத்து மதங்களையும் அதன் மூட பழக்கவழங்களையும் சாடி இருக்கிறார். கடவுளை அடைய வழிகாமிக்கிறேன் என்று திரியும் அனைத்து சாமியார்களும் பித்தலாட்டகாரர்கள் என்பதை ஆணித்தரமாக கூற ஒரு சாமியாரின் வேஷத்தை கலைத்து அவரிடம் இருக்கும் தன் ரிமோட்டை மீட்கிறார். தேவையற்ற எந்த சண்டைகாட்சிகளோ வன்முறை காட்சிகளோ இல்லாமல் சொல்ல வந்த மிக கடினமான விசயத்தை நகைசுவையாக சொல்லி இருக்கிறார்.

அமீர்கான் புவிக்கு வரும் அதே நேரம் பெல்ஜியத்தில் கதாநாயகி ஒரு பாகிஸ்தானியை சந்திக்கிறார். ஆரம்பத்தில் அழகாக பெசிகொண்டிருந்த நாயகி அவன் பாகிஸ்தானி என்று தெரிந்தவுடன் விலக முயல்கிறார். அப்போது அந்த பாகிஸ்தானி பெயரை கேட்டு பழகு நாட்டை கேட்டு பழகாதே என்ற அர்த்தத்தில் ஒரு பாடல் பாடுகிறார். இது இந்தியர் பாகிஸ்தானியருக்கு மட்டுமல்ல எல்லா நாட்டினர்க்கும் பொருந்தும் பாடல் ஏன் நம் இந்திய தேசத்தில் உள்ள எல்லா மாநிலத்திறுக்குமே பொருந்தும். பாடல் முடிவில் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். இதை நாயகியின் பெற்றோர் எதிர்கிறார்கள் அவர்கள் குருவாக வணங்கும் ஒரு சாமியார் மூலம் அறிவுரை வழங்க வைக்கிறார்கள். அந்த சாமியார் அவன் உன்னை ஏமாற்றி ஓடி விடுவான் என்கிறார். அதே போல் நடந்துவிடுகிறது. விரக்த்தியில் வெறுத்து இந்திய திரும்புகிறாள் கதாநாயகி. பின் இவர்கள் இருவர் காதல் எப்படி பிரிந்தது உண்மையிலையே அந்த பாகிஸ்தானி விட்டு ஓடிவிட்டானா இல்லை வேறு எதுவும் நிகழ்ந்ததா? இறுதியல் அவர்கள் ஒன்னு சேர்வார்கள்? அது எப்படி என்பதே இவர்கள் கதை.

என்னடா ரெண்டு கதையா இருக்கேன்னு பார்க்கிறீர்களா. நான் சொல்லிய விதம் அப்படி ஆனால் படம் பார்க்கும்போது அப்படி ஒரு உணர்வு இருக்காது. நான் சொல்ல ஆரமித்தால் முழு கதையும் சொல்லி உங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை கேடுத்துவிடுவேன் என்பதாலே அங்க இங்க என கொஞ்சம் கொஞ்சமாக கொதறி வைத்துள்ளேன். மிக அழகான திரைக்கதை எந்த இடத்திலும் இழுவை இல்லை. இசை எல்லா இந்திபட பாடல்கள் போல அதே டண்டணக்கா பாடல் அப்பறம் காதல் பாடல் இருந்தது. எனக்கு இந்தி தெரியாதாலும் இதுவே இந்த பாடல்களை கேட்பது முதல் முறை என்பதாலும் அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக பாடல்கள் மொக்கையில்லை.

நிறைய பெரிய விசயங்களை சின்ன சின்னதாக சொல்லியிருக்கிறார்கள் இதே போன்ற பல விசயங்களை நம்ம விவேக் அவர்கள் நிறைய படத்தில் சொல்லியிருக்கிறார். இது உண்மையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் தான். அதனால் நீங்களே பார்த்து தெரிஞ்சுகோங்க. நான் சொல்ல வந்தது படம் நல்லா இருக்கு அவளோ தான்.

மொத்தத்தில் பிகே ஓகே ஓகே.......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக