செவ்வாய், 1 ஜூலை, 2014

சினிமா - வடகறி


வடகறி - என்னடா இது இப்படி ஒரு பேரு வச்சிருக்காங்க ஒருவேளை சாப்பாட்ட பத்தின படமோன்னு நினைச்சு பார்த்தா. படத்தோட ஆரம்பத்திலையே அதற்கான காரணத்தை நம்ம ஆர்ஜெ பாலாஜி சொல்லிறாரு. அதாவதுங்க இந்த படத்துல  வளவளா கொலகோலா கடாமுடா காமெடிகள் நம்ம ஆர்ஜெ பாலாஜி பண்ணிருக்காரு அவரு பேரு தான் வடகறி அதான் படத்தோட பேரும். இது என்ன லாஜிக்ன்னு கேட்காதீங்க படத்துல நிறைய இடத்துல இந்த கேள்விய கேட்க வேண்டி வரும்...இது தான் இப்போ வர படம் எதுலையுமே இருக்குறது இல்லையே அதனால அதை பத்தி நாம ரொம்ப யோசிக்க வேண்டாம்...

இப்போ படத்துக்கு வருவோம் இது ஒரு காமெடி உடன் கூடிய திரில்லர் படம்ன்னு சொல்லலாம் கடைசி வரை யார்ரா வில்லன்னு நம்மள யோசிக்க வச்சிருக்காங்க. படத்துல சமீபத்துல நம் மனதை பதைபதைக்க வைத்த மருந்து பொருட்கள் கலப்படம் மற்றும் காலாவதியான மருந்து பொருட்களை போலியாக லேபில்களை மாற்றி விற்று மக்களை ஏமாற்றினார்கள் என்று ஒரு செய்தி படித்திருப்போம். அதை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தோட கதாநாயகன் ஜெய் ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க இளைஞன் மெடிக்கல் ரெப்பாக வருகிறார். அவரின் முகம் இயல்பாகவே ரொம்ப அப்பாவித்தனமாக இருப்பாதால் அதற்கென மெனக்கெட்டு நடிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அப்படியே பொருந்தி இருந்தார் இவரின் நண்பர் தான் பாலாஜி இவர் பொண்ணு உசார் பண்றதுக்காக நண்பனுக்கு ஒரு கொரியா போன வாங்கி கொடுக்கிறார் இந்த டுப்ளிகேட் மொபைல்லால பலர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார் ஜெய். அந்த சமயத்துல அவருக்கு ஒரு ஐபோன் அதிர்ஷ்ட்டவசமாவோ இல்லை விதிவசமாவோ கிடைக்குது. அதனால அவர் பல இன்னல்கள் துன்பங்கள் பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார் அதிலிருந்து தப்பிக்கிறார் அதான் மீதி கதை.

படத்தோட எந்த இடத்திலுமே சுவாரசியமோ காமெடியோ குறையல. கதாநாயகி சுருதி ஹீரோ என்ன பிரச்சனைல இருக்கான்னே தெரிஞ்சிக்காம எப்பவும் போல என்ன நீ லவ் பண்ணறியா இல்லையாடான்னு கேட்டுகிட்டு இருக்குற அதே கதாபாத்திரத்துல தான் நடிச்சிருக்காங்க.

வில்லன்கள பத்தி சொல்லனும்னா எவன் தான் உண்மையான வில்லன்னு கண்டுபுடிக்கிறது கொஞ்சம் சிரமம் தான். ஒரு குரூப் சந்தர்ப்பவசத்தால வில்லன் ஆனவங்க இவன்க்ய கொஞ்சம் நல்ல வில்லனுக . இன்னொருத்தன் கொஞ்சம் மோசமான வில்லன் அவன தேடி தான் நம்ம கதாநாயகன் ஓடிகிட்டே இருப்பாரு.  கடைசில கண்டுபுடிக்கிறப்போ அட ச்சீ இவன் தானா அவன்னு நாம நினைப்போம்.

பாடல்கள் ஒரு ரெண்டு பாட்டு நல்லா இருந்த மாதிரி இருந்தது ஒன்னு அவரு காதல சொல்ல பின்னாடியே போறப்போ வரும்... இன்னுன்னு ஐபோன் குள்ள இருந்து ஜெய் பாடுவாரு இது குழந்தைகள கவரும்னு நினைக்கிறேன் ஆனா அது சோக பாட்டு... அப்பறம் ஒரு பாட்டு வில்லன் மேல பயங்கர கோவத்துல அவன் மருந்து குடோன் எல்லாம் காலி பண்றப்போ வருது ஆனா அது அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமா எல்லாம் இல்லை.

காமெடி பத்தி சொல்லனும்ன்னா நம்ம ஆர்ஜெ பாலாஜி சும்மா பேசிகிட்டு இருந்தாலே மூணு நாளைக்கு உக்காந்து கேட்கலாம் அவளோ காமெடியா பேசுவாரு இந்த படத்துல காமெடி வேற பண்ணிருக்காரு கேட்கவா வேணும் செம. அவர் இல்லாம ஒரு கொரியா மொபைல்லும் காமெடி பண்ணிருக்கு. படத்துல காமெடி தான் ஹைலைட்.

மொத்ததுல வடகறி ஜாலியா போய் ஹோட்டல்ல ஜாலியா ஒரு வடகறி சாப்பிட்டு வந்த அனுபவம்....


- ஜெயா

சினிமா - முண்டாசுபட்டி


முண்டாசுபட்டி - போஸ்டர்லாம் பாத்துட்டு எதோ சுப்பராமணியபுரம் மாதிரி படம் போல.... சும்மா மதுரை மதுரைன்னு சொல்லிக்கிட்டு ஒரு பத்து பேர சதக் சத்க்ன்னு போட்டு தள்ளுவாங்கன்னு நினச்சேன்... ஆனா அப்படி எதுவும் இல்லை... சரி வேற என்ன தான் வித்தயாசம்ன்னு பாத்தா படத்துல எப்பவும் போல காதல் தான். என்ன அந்த காதல கொஞ்சம் கலகலப்பா பண்ணிருக்காங்க....

படத்தோட ஆரம்பத்துல முண்டாசுபட்டில மக்கள் எல்லாம் கொத்து கொத்தா ஒரு கொடிய நோய் வந்து செத்து போறாங்க... அப்போ அந்த மக்கள் எல்லாம் ஊர் எல்லைல இருக்க முனீஸ்வரன் கிட்ட கடவுளே எங்கள காப்பாத்துன்னு ஓடுறாங்க இந்த சமயம் ஒரு பெரிய கொள்ளைக்கார கும்பல் அந்த முனீஸ்வரனவே கடத்திட்டு போக வராங்க. கதறி அழுகுற மக்களை மிரட்டிட்டு சாமி சிலைய எடுக்க போகும் போது வானத்துல இருந்து பாய்ந்து வந்த ஒரு விண்கல் அந்த கொள்ளைகூட்டத்து தலைவன் மண்டைய பொளக்குது அவன் மர்கயா ஆனத பார்த்த மத்த கொள்ளைகாரங்க எல்லாம் தலை தெறிக்க ஓடிப்போயடுறானுக. ஊர் மக்கள் எல்லாம் வானத்துல இருந்து கல் வந்த்ததால வானமுனின்னு பேர் வச்சு கும்பிட ஆரமிச்சிறாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்ட ஒரு வெள்ளைகார டாக்டரு அந்த கல்லை ஆராய்ச்சி பன்ன அங்க வர்றாரு வரவரு தன் கைல இருந்த கேமராவ வச்சு கல்ல படம் பிடிக்க போறத பார்த்த மக்கள் எல்லாம் இவன் இதுக்கு முன்னாடி போட்டோ எடுத்த எல்லாருமே நோய் வந்து செத்து போய்டாங்க அதனால போட்டோ எடுத்தா நாமும் செத்து போயடுவோம்ன்னு நினைச்சு அவன அடிச்சு துரத்துறாங்க. ஓடி போன வெள்ளைக்காரன் கல்லுல இருந்து கொஞ்சம் உதிரிகளையும் பொருக்கி எடுத்துட்டு பார்த்தா அதுல விலை மதிக்க முடியாத பல கனிமங்கள் இருக்கு. இந்த வெள்ளைக்காரன் மத்த வெள்ளைகாரங்க மாதிரி வில்லத்தனமா யோசிக்காம பாவம் அந்த மக்கள் பொழச்சு போகட்டும்ன்னு யாருக்கும் சொல்லாம விட்டுறான். இது எல்லாம் இந்த படம் ஆரமிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடறாங்க. அதாவது இந்த ஊர் மக்களுக்கு கேமரன்னா பயம். அப்பறம் வானமுனி தான் எல்லாம் வானமுனி வந்த அப்பறம் தான் ஊர் செழித்ததுன்னு ஒரு நம்பிக்கை. இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சதே வானமுனினால தான்னு இவங்க நினச்சுகிட்டு இருக்காங்கன்ன பாத்துகோங்களே.

இப்போ படம் ஒரு 80கள்ள நடந்த கதைமாதிரி ஆரமிக்குது ஹாலிவுட் ஸ்டுடியோ இது தான் நம்ம கதாநாயகன் விஸ்னுவோட ஸ்டுடியோ அவருக்கு ஒரு அசிடேன்ட். ரெண்டுபேரும் படத்துல அவங்க வேலைய ரொம்ப சரியா செய்திருக்காங்க காமெடி சூப்பரு. இவங்க ஒரு பொண்ணுங்க பள்ளிகூடத்துக்கு போட்டோ எடுக்க போறாங்க அந்த தான் கதாநாயகி நந்திதாவ பாக்குறாங்க நாயகன் காதல்ல விழுகுறாரு. அப்பறம் திரும்ப பள்ளிக்குடத்துக்கு பார்க்க வரப்போ தான் தெரிஞ்ச்சது நந்திதாவுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது அதனால இனி பள்ளிகூடத்துக்கு வரமாட்டான்னு. இதை கேள்விப்பட்டு மனம் ஒடிஞ்சு போய் உக்காராரு ஹீரோ. அந்த சமயம் ஒரு பொணத்த போட்டோ எடுக்க முண்டாசு பட்டில இருந்து ஒருத்தார் வாராரு. நான் ஒரு பெரிய கேமராமேன் என்ன போய் ஒரு பொணத்த போட்டோ எடுக்க கூப்பிடுரயான்னு கூப்பாடு போடுற ஹீரோ பணத்த பாத்தவுடனே அடங்கிடுறாரு. அப்பறம் வந்தவர் கூட கிளம்பி முண்டாசுபட்டிக்கு போறாரு அங்க போய் பார்த்தா நம்ம கதாநாயகி இழுத்துகிட்டு கிடக்குற அவங்க அபுச்சி (தாத்தா) வாய்ல பால் ஊத்திகிட்டு இருக்கு. ஏன்யா சாகவே இல்லையையே அப்பறம் ஏன்யா இப்படி சொன்னீங்கன்னு கேட்க இல்லை நீங்க வரதுக்குள்ள முடிச்சுரும்ன்னு நினைச்சோம் கொஞ்சம் இருந்து செத்த உடனே படம் புடிச்சுருங்கன்னு சொல்லறாங்க  ஊர்காரங்க. அப்போ உயிரோடவே எடுத்துருவோம்ன்னு சொல்லறாரு விஸ்ணு. உயிரோட இருக்கவங்கள படம் புடிச்சா சீக்கு வந்து செத்து போயிருவாங்க நீ இருந்து செத்த அப்பறம் எடுத்துகொடுத்துட்டு போன்னு சொல்றாங்க ஊர்காரங்க. சரி கதாநாயகி இருக்க ஊர்ல இருக்க இவருக்கு கசக்குமா என்ன. இது தான் சாக்கு இருந்து எப்படியாவது கரெக்ட் பண்ணிரலாம்ன்னு அங்கேயே இருக்காரு விஸ்ணு.

அப்போ ஒரு நல்ல சந்தர்பத்துல தன்னோட காதல கதாநாயகிட்ட சொல்லிடறாரு விஸ்ணு. அந்த சமயம் ஊர் மக்கள் எதிர்பார்த்தது போல அபுச்சி மண்டைய போடறாரு. அப்பறம் கதாநாயகன் போட்டவும் எடுக்குறாரு. இவரு போட்டோ எடுக்கைல கூட ஊர் மக்கள் யாரும் பக்கத்துல வர்ரதுயில்ல கேமரான்னா அவளோ பயம். இதுல ஒரு பொண்டாட்டி புருசனையும் புருஷன் பொண்டாட்டியயும் போட்டோ எடுக்க சொல்லி விஷ்ணுவுக்கு பணம் கொடுப்பது மாஸ்டர் மர்டர் பிளான்.

எடுத்த போட்டவ கழுவி நல்லா பிரேம் போட்டு கொண்டுபோய் கொடுத்து பொண்ணு கேட்கலாம்ன்னு ப்ளான் பண்ணி எடுத்துட்டு வந்த நெகடிவா பாத்தா அபுச்சி மூஞ்சி செதஞ்சு போய் இருக்கு. சரி பொணத்த தோண்டி எடுத்து போட்டோ புடிச்சுராலாம்ன்னு போய் பார்த்தா அதையும் எரிச்சுடுறாங்க. அந்த சமயத்துல தான் வரார் முனீஸ் கான் இவரு ஒரு பெரிய ஹீரோ ஆகனும்ன்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு இவரு மூஞ்சி அப்படியே அபுச்சி மூஞ்சி மாதிரி இருந்ததால அவர்கிட்ட உனக்கு நடிக்க சான்ஸ் வாங்கி தரேன்னு பொய்ய சொல்லி பொணம் வேஷம் போட்டு படம் எடுத்துட்டு முண்டாசுபட்டிக்கு போய் கொடுக்குறாங்க. அப்போ அங்க வராரு நம்ம முனிஸ் கான் ஐயோ சித்தப்பா சொல்லாம கொல்லாம இப்படி போய்ட்டியேன்னு கதறி போட்டோவ கட்டிபுடிச்சி அழுகுறாரு அந்தபக்கம் உக்காந்து சாப்ப்டுகிட்டு இருக்க நம்ம விஸ்ணுவயும் அவரு பிரண்டையும் பாக்குறாரு மறுபடி அந்த அப்புச்சி போட்டோவ பாக்குறாரு அட பாவிகளா என்னையவே ஏமாத்தி புட்டீங்களான்னு ஊரே சேர்ந்து விரட்டி புடிக்கிறாங்க. அந்த ஊர் பழக்கம் என்னன்னா யார் தப்பு பண்ணினாலும் அந்த ஊர் சாமியார் ஒருத்தர கூப்பிட்டு குறி கேட்டு ஒரு மணிய தொங்க விடுவாங்க அந்த மணியடிச்சா தான் வானமுனி ஏத்துகிட்டாருன்னு சொல்லி கைய முறிச்சுடுவாங்க. எப்பவுமே வானமுனி அனுமதி கிடைச்சுரும் ஆனா இந்த முறை மணி அடிக்கல சரி கடவுளே தண்டிக்க வேண்டாம்ன்னு சொல்றாரு மன்னிச்சுராலாம்ன்னா இவங்க ஒன்னும் அவளோ சாதாரண தப்பு பண்ணல பாவம் நம்ம முனிஸ் கான் அவரால இதை தாங்கிக்கவே முடியல. அதனால ஊர்காரங்க இவங்க ரெண்டு பேருக்கும் ஊர்ல தண்ணி வர்ற வரைக்கும் கிணறு வெட்டனும்னு ஒரு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு மேற்பார்வையாளரா நம்ம முனிஸ் கான போட்டாங்க.

இது ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கைலயே இன்னொரு பக்கம் வானமுனியோட ரகசியம் தெரிஞ்ச ஒரு வெள்ளைக்காரன் ஜெமின் ஆனந்தராஜ் கிட்ட அந்த கட்ட கடத்திட்டு வரசொல்லி டீல் பேசுறான். கல்லு எனக்கு பாரின் சரக்கு உனக்கு இது தான் அங்க டீலிங். ஜமீனும் தன்னோட ஆள அனுப்பி திருடிட்டு வர சொல்லறார் ஆனா போனவனோட கைய ஊர்காரங்க முறிச்சு அனுப்பிறாங்க.

இப்போ கிணறு வெட்டுற சாக்குல அந்த ஊர்ல இருக்க நம்ம கதாநாயகன் எப்படி கதாநாயகிய கரெக்ட் பண்ணுறாரு. அது வேற ஏற்க்கனவே  நிச்சயம் ஆன பொண்ணு வேற அதனால அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு என்னென்ன திருட்டு வேலை பாக்குறாங்க. உடைக்கவே முடியாத அந்த பூட்ட உடைச்சு வானமுனிய அந்த ஜமீன் கடத்துரானா. என்பது மீதிகதை. இது எல்லாமே ரொம்ப கமேடியாவே நகர்கிறது. பெருசா செண்டிமென்ட்டோ கருத்து சொல்லி ஊர திருத்துறதோ எங்கையுமே இல்லை...

நான் ரொம்ப ரசிச்சு ஒரு நாவல் படித்தது போல் பார்த்தேன். கண்டிப்பா நீங்களும் நம்பி பார்க்கலாம்.

முண்டாசுபட்டி முண்டாசு கட்டிய மூட நம்பிக்கைகளின் பட்டி...
அங்க இருக்கு ஒரு அழகான குட்டி...
அவள காதலிக்கிறான் நம்ம  சிங்க குட்டி....
இவளோ நேரம் உங்களுக்காக இதை எழுதுனது ஒரு தங்க கட்டி....


-ஜெயா

கவிதை - மறந்தேன்

மறந்து விட நினைத்தேன்!
               மறந்து விட்டேன்!
உன்னை பற்றிய நினைவுகளை அல்ல!
உன்னை பற்றிய கனவுகளை....!


-ஜெயா

கவிதை - ரோஜா முள்

ரோஜாவை ரசித்தேன்!
அதில் முள் இருப்பதையே மறந்தேன்!
குத்திவிட்டாயடி....
என் இதயத்தில்!


-ஜெயா

கவிதை - குழந்தையானேன்

குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தில்....
நாமும் குழந்தையாகிறோம்!
முட்டி வலி வரும் வரையில்.

-ஜெயா

கவிதை - கவிஞன்

அவளை கண்ட அந்த நொடியில்...
தான் கண்டு கொண்டேன்!

எனக்குள் இத்தனை நாள் ஒளிந்திருந்த...
அந்த கவிஞனை!


-ஜெயா