திங்கள், 30 ஜூன், 2014

கவிதை - தலைப்பு செய்தி.....

கண்ணே மணியே என கொஞ்சிய பிள்ளை...
இக்கரையில் காத்திருக்க....

அத்தானை காணாமல் அழுத கண்ணீரையும் துடைக்காமல்...
பூத்த விழி பூத்திருக்க....

அண்ணன் அள்ளி வருவான் நம் துயரம் துடைக்க வருவான்...
என தங்கையவள் எதிர்பார்த்து நிற்க...

வந்தது அன்றய தலைப்பு செய்தி......
துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது....
முதலவர் பிரதமருக்கு கடிதமென்று......


-ஜெயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக