திங்கள், 30 ஜூன், 2014

தெரிந்துகொள்வோம் - டாலரும் ரூபாயும்


ருபாய் மதிப்பு குறையுது குறையுதுன்னு சொல்றாங்களே... அது ஏன் குறையுது? எப்படி குறையுது? அதனால ஏன் விலை உயருது?


பலங்காலங்கள்ள ஒரு நாட்டல இருந்து இன்னொரு நாடு ஏதாவது பொருள வாங்கனும்ன்னா அவங்ககிட்ட இருக்க அதுக்கு சமமான பொருள கொடுத்து தான் வாங்குவாங்க இதுக்கு தான் பண்டம்மாற்று முறைன்னு பேரு....


காலப்போக்குல பணம்ன்னு ஒன்ன அறிமுக படுத்தினாணுக... அதை ஒவ்வொரு நாட்டுகாரனும் அவனுக்கு தகுந்த மாதிரி அடிசுகிட்டான்... அதனால ஒரு நாட்டு பணம் மற்ற நாட்டுல வெறும் பேப்பர் தான்... இப்போ வேற ஒரு நாட்டல இருந்து ஏதாவது பொருள் வாங்கனும்ன்னா அதுக்கு நம்ம நாட்டு கரன்சிய கொடுத்தா அதுல அவனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை ஏன்னா நம்ம கரன்சி அவன் ஊர்ல செல்லாது.. சரி அவன் கரன்சிய கொடுபோம்ன்னா அதுவும் நம்மகிட்ட இருக்காது... இப்போ எப்படி தான் இந்த பிரச்சனைய சமாளிக்கிறது எப்படி மற்ற நாடுகள் கிட்ட இருந்து நம்ம பொருட்கள இருக்குமதி செய்றது?


இதுக்கு ஒரே வழி உலகத்துல உள்ள அத்தனை நாட்டுக்கும் ஒரே கரன்சி வைக்கிறதுதான். இது நடமுறைல சாத்தியமே இல்லாத ஒன்னு. அதனால ஏதாவது ஒரு நாட்டு கரன்சிய போது கரன்சியா பயன்படுத்தலாம்ன்னு ஒரு தீர்வு இருந்துச்சு. ஆனா எந்த  நாட்டு கரன்சிய பயன்படுத்துறது?


இந்த சமயத்துல தான் ஆதிக்க சக்தியா இருந்த அமெரிக்காகாரன் அவன்கிட்ட வாணிபம் பன்னிகிட்டு இருந்த நாடுகள்கிட்ட எல்லாம் உன்கிட்ட நான் இருக்குமதி பன்ற பொருளுக்கு அமெரிக்க டாலர் தான் தருவேன் நீங்களும் எங்ககிட்ட வாங்குற பொருள்களுக்கு டாலர் தான் தரனும்ன்னு ஒரு கண்டிசன் போட்டுகிட்டான். இப்போ என்ன ஆச்சுன்னா எந்தெந்த நாடெல்லாம் அமெரிகாகிட்ட இருந்து பொருள் இறக்குமதி செய்யணுமோ அவங்க எல்லாத்துக்கும் அமெரிக்க டாலர் தேவை பட்டுச்சு. உலகத்துலயே ஒன்னா நம்பர் ஆயுத வியாபாரியான அமெரிக்கன்ட்ட இருந்து எல்லாருக்கும் நிறைய இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இந்த சூல்நிலைல அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகள் அவர்களுக்குள் வியாபாரம் செய்யும் போதும் அமெரிக்க டாலர்லேயே   செய்ய ஆரமிச்சாங்க ஏன்னா எல்லா நாட்டுக்குமே அமெரிக்கா கிட்ட இருந்து ஆயுதம் போன்றவைகள் வாங்க அவர்களுக்கு டாலர் தேவை பட்டது. அமெரிக்கனும் இந்த சூழ்நிலைய தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு பிரச்சனையே இல்லாத நாடுகள்ல பிரச்சனைய உண்டு பண்ணிவிட்டாணுக. அதே மாதிரி பக்கத்து பக்கத்துக்கு நாடுகளுக்கு இடையிலும் பிரச்சனைய உண்டு பண்ணிவிட்டாணுக. இப்படியே காலபோக்குல இவன் கரன்சிய உலகத்தின் போது கரன்சி மாதிரி ஆக்கிட்டான். இப்படி சிக்கிய நாடுகள்ள ஒன்னு தான் நம்ம இந்தியாவும்.

இப்போ நம்ம நாடு நிறைய பொருட்களையோ இல்லை வேற சரிவீஸ்ன்னு சொல்லுற சேவையையோ அதிகமா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்ன்னு வச்சுகோங்க அதனால என்ன ஆகும்ன்னா நம்ம கிட்ட இருந்து பொருட்கள வாங்குறவன் அமெரிக்க டாலரா கொடுப்பான். அப்போ நம்மகிட்ட அதிகமா அமெரிக்க டாலர் இருக்கும். இந்த டாலர்கள வச்சு எந்த நாட்டுகிட்ட இருந்தும் நமக்கு தேவையான பொருட்கள வாங்கிக்கலாம். அதே நேரத்துல நம்மகிட்டயே தேவையான அமெரிக்க டாலர் இருக்கைல நம்ம நேரடியா நம்ம ரூபாய கொடுத்து டாலர் வங்குற வாய்ப்பு குறைவு. அதனால சந்தைல அமெரிக்க டாலர் விக்குறவன் வாங்க ஆள் இல்லைன்னு தெரிஞ்சவுடன் அதோட விலைய படிப்படியா குறைப்பான். அப்போ ரூபாயோட மதிப்பு கூடும்...

அதே நேரத்துல ஏற்றுமதி ரொம்ப கம்மியா பன்னிட்டு அதிகமா இறக்குமதி பண்ணினோம்னா நாம இறக்குமதி பண்ணின நாடுகளுக்கெல்லாம் பணம் செலுத்த வேண்டும் அதை அமெரிக்க டாலராக தான் செலுத்த வேண்டும். இப்போ நம்ம குறைவா ஏற்றுமதி பண்ணினதால கைல குறைவான டாலர்கள் தான் இருக்கும் ஆனா அதிக இறக்குமதி பண்ணினதால அதிக அமெரிக்க டாலர் மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டும். இப்போ சந்தைல இருக்கவன் நமக்கு டாலரின் தேவை அதிகமா இருக்குறதால அதோட விலைய படிபடியா உயர்த்துவான். அப்போ ரூபாயோட மதிப்பு குறையும்.

கிட்ட தட்ட மீன் மார்க்கெட்ல மீன் வாங்குற மாதிரி தான் கூட்டமே இல்லாம அதிகமா மீன் இருந்தா மீன் விலை குறையும். மீன் குறைவா  இருந்து கூட்டம் அதிகமா இருந்தா மீன் விலை கூடும். அதே தான் இங்கயும். வெங்காயத்துல இருந்து ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ், கச்சா என்னை வரை ஏகப்பட்ட பொருட்கள இறக்குமதி செய்வதால் தான் நம் ரூபாய்க்கு இன்று இந்த நிலைமை.

இப்போ டாலரவே அதிக ருபாய் குடுத்து வாங்குறோம் இதுல எண்ணை வியாபாரிகள் விலையை எத்திடானுகன்னா ஒரே அடியா நாட்டில் உள்ள எல்லா பொருட்களின் விலையும் உயரும். காரணம் நாம சாதரணமா வாங்குற ஒரு பொருளின் விலை அதோட அடக்க விலையை போல் பத்து மடங்காவது இருக்கும் இதற்க்கு முக்கிய காரணம் ஒரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு பொருட்களை எடுத்து செல்ல ஆகும் செலவே. எண்ணை விலை அதிகரித்தால் போக்குவரத்து செலவு அதிகமாகும்... போக்குவரத்து செலவு அதிகமானால் பொருளின் விற்பனை விலையும் அதிகமாகும்.

எனக்கு தெரிஞ்ச அளவுல ஒரு கதை மாதிரி சொல்லி முடிச்சிருக்கேன்... தவறாக ஏதாவது இருந்தால் திருத்தவும்.


-ஜெயா

கவிதை - தலைப்பு செய்தி.....

கண்ணே மணியே என கொஞ்சிய பிள்ளை...
இக்கரையில் காத்திருக்க....

அத்தானை காணாமல் அழுத கண்ணீரையும் துடைக்காமல்...
பூத்த விழி பூத்திருக்க....

அண்ணன் அள்ளி வருவான் நம் துயரம் துடைக்க வருவான்...
என தங்கையவள் எதிர்பார்த்து நிற்க...

வந்தது அன்றய தலைப்பு செய்தி......
துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது....
முதலவர் பிரதமருக்கு கடிதமென்று......


-ஜெயா